மிசெளரி தமிழ் சங்கம் எதிர் பார்ப்புகளும் ஏமாற்றங்களும்
முதல்ல நம்ம எதிர்பார்ப்புகளை பார்ப்போம்
தமிழ்ச்சங்கம் இந்திய தர்மத்தை அடியொற்றி இயங்கும், உலகத் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு.
தமிழ்ச்சங்கம் இந்தியாவின் கலாசாரச் செழுமையையும் அதன் தொன்மையான அங்கமான தமிழின் சிறப்பையும் உலகத் தமிழ் மக்களை பெருமிதத்துடன் ஒன்றிணைக்கும் உன்னதக்கூறுகளாக மதிக்கிறது.
உலகமயமாகும் இந்நாளில், இளைய தமிழ்ச் சமுதாயம் தமது கலாசாரம், ஆன்மீகம், மற்றும் வரலாறு ஆகியவை குறித்த அறிவையும், தெளிவையும், பெருமிதத்தையும் கொண்டிருத்தலை, அதன் எதிர்கால இருப்புக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அவசியமான ஒன்றாக தமிழ்ச்சங்கம் காண்கிறது
பாரதப்பண்பாட்டின் முக்கிய அங்கமான தமிழரின் கலை, இலக்கியம், இந்து ஆன்மீகம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை இளைய சந்ததியினரின்- குறிப்பாக தமிழ்க்குழந்தைகளின் - மனதில் பதியவைக்க தமிழ்ச்சங்கம் செயல் திட்டங்களை மேற்கொள்ளும்.
இயல், இசை, நாடகம், நாட்டியம் உள்ளிட்ட பல தனித்திறமைகளையும் படைப்புத்திறன்களையும் வெளிச்சம் போட, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தமிழ்ச் சங்கம் அரங்கம் ஏற்படுத்தித் தரும்.
"ஊருக்கு உழைத்திடல் யோகம்" என்ற பாரதியின் மொழிக்கிணங்க தமிழ்ச்சங்கம் தன்னார்வல சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் பங்கெடுக்கும். மேற்சொன்ன அடிப்படைக்கூறுகளை வலுப்படுத்தும் வகையில் ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன் தமிழ்ச்சங்கம் இணைந்து இயங்கும்.
இப்போ இங்கே நம்ம ஊரிலே செயின்ட் லூயிஸ்லே என்ன நடக்குதுன்னு பார்ப்போம்
தமிழ்ச்சங்கம் இந்திய தர்மத்தை அடியொற்றி இயங்கும், உலகத் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு. நம்ம தமிழ் சங்கம் என்ன செய்றாங்க - 2௦௦௦ ஆண்டு தொடங்கும் போதே மிகபெரிய களேபரம் - இலங்கை தமிழர்களை சேர்பதா இல்லையா என்று. அந்த வருடத்துடன் தொடக்க அமைப்பாளர்கள் இருவர் தமிழ் சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இன்றும் அங்கே ஒரு குழுவை சேர்ந்தவர்களின் முன்னிறுத்தலை மட்டுமே நாம் காண்கிறோம். ஒருவர் வரவேற்ப்பு அறையில் உட்கார்ந்திருக்கும் ஒரு பொறுப்பாளரிடம் organizers எல்லாரும் நம்மவாளா ? என்று நேரிடையாக கேள்வி கேட்கும் நிலையில் இருக்கிறது. ஐயா தமிழத்தில் இருந்து இவ்வளவு தூரம் வந்தும் உங்களால் இதை மட்டும் விட முடியவில்லையா ?
முதல்ல நம்ம எதிர்பார்ப்புகளை பார்ப்போம்
தமிழ்ச்சங்கம் இந்திய தர்மத்தை அடியொற்றி இயங்கும், உலகத் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு.
தமிழ்ச்சங்கம் இந்தியாவின் கலாசாரச் செழுமையையும் அதன் தொன்மையான அங்கமான தமிழின் சிறப்பையும் உலகத் தமிழ் மக்களை பெருமிதத்துடன் ஒன்றிணைக்கும் உன்னதக்கூறுகளாக மதிக்கிறது.
உலகமயமாகும் இந்நாளில், இளைய தமிழ்ச் சமுதாயம் தமது கலாசாரம், ஆன்மீகம், மற்றும் வரலாறு ஆகியவை குறித்த அறிவையும், தெளிவையும், பெருமிதத்தையும் கொண்டிருத்தலை, அதன் எதிர்கால இருப்புக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அவசியமான ஒன்றாக தமிழ்ச்சங்கம் காண்கிறது
பாரதப்பண்பாட்டின் முக்கிய அங்கமான தமிழரின் கலை, இலக்கியம், இந்து ஆன்மீகம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை இளைய சந்ததியினரின்- குறிப்பாக தமிழ்க்குழந்தைகளின் - மனதில் பதியவைக்க தமிழ்ச்சங்கம் செயல் திட்டங்களை மேற்கொள்ளும்.
இயல், இசை, நாடகம், நாட்டியம் உள்ளிட்ட பல தனித்திறமைகளையும் படைப்புத்திறன்களையும் வெளிச்சம் போட, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தமிழ்ச் சங்கம் அரங்கம் ஏற்படுத்தித் தரும்.
"ஊருக்கு உழைத்திடல் யோகம்" என்ற பாரதியின் மொழிக்கிணங்க தமிழ்ச்சங்கம் தன்னார்வல சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் பங்கெடுக்கும். மேற்சொன்ன அடிப்படைக்கூறுகளை வலுப்படுத்தும் வகையில் ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன் தமிழ்ச்சங்கம் இணைந்து இயங்கும்.
இப்போ இங்கே நம்ம ஊரிலே செயின்ட் லூயிஸ்லே என்ன நடக்குதுன்னு பார்ப்போம்
தமிழ்ச்சங்கம் இந்திய தர்மத்தை அடியொற்றி இயங்கும், உலகத் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு. நம்ம தமிழ் சங்கம் என்ன செய்றாங்க - 2௦௦௦ ஆண்டு தொடங்கும் போதே மிகபெரிய களேபரம் - இலங்கை தமிழர்களை சேர்பதா இல்லையா என்று. அந்த வருடத்துடன் தொடக்க அமைப்பாளர்கள் இருவர் தமிழ் சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இன்றும் அங்கே ஒரு குழுவை சேர்ந்தவர்களின் முன்னிறுத்தலை மட்டுமே நாம் காண்கிறோம். ஒருவர் வரவேற்ப்பு அறையில் உட்கார்ந்திருக்கும் ஒரு பொறுப்பாளரிடம் organizers எல்லாரும் நம்மவாளா ? என்று நேரிடையாக கேள்வி கேட்கும் நிலையில் இருக்கிறது. ஐயா தமிழத்தில் இருந்து இவ்வளவு தூரம் வந்தும் உங்களால் இதை மட்டும் விட முடியவில்லையா ?
தமிழ்ச்சங்கம் இந்தியாவின் கலாசாரச் செழுமையையும் அதன் தொன்மையான அங்கமான தமிழின் சிறப்பையும் உலகத் தமிழ் மக்களை பெருமிதத்துடன் ஒன்றிணைக்கும் உன்னதக்கூறுகளாக மதிக்கிறது.
நம்ம ஊரிலே இந்த சுற்று வட்டத்திலே 4௦௦௦ தமிழ் மக்கள் இருந்தாலும் இங்கே வருவதேன்பதோ தொன்று தொட்டு தமிழ் சங்கத்தில் வந்து கொண்டிருக்கும் அதே 40குடும்பங்கள் தான்.
நம்மால் எத்தனை புதிய தமிழர்களை நம்மால் இங்கே கொண்டுவர முடிகிறது ? நாம் நமக்குள்ளே பிரிந்து கிடக்கும் பொது எங்கிருந்து நம்மால் புதிய தமிழர்களை இங்கே கொண்டுவர முடியும் ?
2௦௦௦ வருஷந்த்தில் தலைவர் மனைவி இப்போ துணை தலைவர், இரண்டு வருடங்களுக்கு முன்பு தலைவி கணவர் இப்போ செயலாளர் இப்படித்தான். நாற்ப்பது ஐம்பது குடும்பங்களை ஒன்றிணைப்பது தமிழ் சங்கம் என்றல் நாம் ஏன் மிசெளரி தமிழ் சங்கம் என்று பேர் வைக்க வேண்டும் ? ஒபால்லோன் தமிழ் சங்கம் என்றோ அல்லது மன்செஸ்டர் தமிழ் சங்கம் என்றோ பேர் வைத்து கொள்ளலாமே ?
உலகமயமாகும் இந்நாளில், இளைய தமிழ்ச் சமுதாயம் தமது கலாசாரம், ஆன்மீகம், மற்றும் வரலாறு ஆகியவை குறித்த அறிவையும், தெளிவையும், பெருமிதத்தையும் கொண்டிருத்தலை, அதன் எதிர்கால இருப்புக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அவசியமான ஒன்றாக தமிழ்ச்சங்கம் காண்கிறது
நமது குழந்தைகளில் எவ்வளவு பேர் தமிழ் பேச படிக்க முடிகிறது ? தமிழ் ஸ்கூல் நன்றாக நடக்கிறது அதனால் தான் என்னவோ நம் குழந்தைகள் தமிழ் என்று ஒன்று இருக்கிறது நாம் தமிழர்கள் என்றாவது தெரிந்து இருக்கிறார்கள். நம்மில் எத்தனை பேர் குழந்தைகள் விவரம் தெரிந்தவுடன் பெருமையாக நாம் தமிழர் என்று தைரியமாக கூறமுடிகிறது ?
இயல், இசை, நாடகம், நாட்டியம் உள்ளிட்ட பல தனித்திறமைகளையும் படைப்புத்திறன்களையும் வெளிச்சம் போட, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தமிழ்ச் சங்கம் அரங்கம் ஏற்படுத்தித் தரும்.
மிக சிறப்பாக இவர்கள் செய்வது இது ஒன்று மட்டும் தான். அதிலும் குழந்தைகளுக்கு மட்டும் தான். எந்த அளவிற்கு ஈடுபாடு இருந்தால் இதை தொடர்ந்து இவர்களால் இவ்வளவு வருடங்களும் செய்ய முடிகிறது. செவ்வனே இதை செய்துவரும் ஐயா இளங்கோவன் மற்றும் வைகை வீரர் சிவா அவர்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
பழைய தலைவர் கமிட்டி மிக நன்றாக செயல்பட்டனர், அவர்கள் பொறுப்பு முடிந்தது. ஆனால் அவர்களில் பலர் பொங்கல் விழா தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு செயின்ட் லூயிஸ் இல் இருந்து கொண்டே வரவில்லை என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். முறைப்படி சில விஷயங்கள் நடக்க வில்லை என்றாலும் இது புதிய கமிட்டி இன் முதல் விழா. அவர்களுடைய திறன் மிகவும் அதிகம் அடுத்த விழா மிக சிறப்பாக அமையும் என்று எதிர் பார்க்கிறோம்.
தமிழ் பள்ளி நிகழ்சிகள் நிகழ்சிகளின் தர உயர்வு தமிழ் பள்ளி செயல்முறை மற்றும் தமிழ் பள்ளி ஒழுங்கமைப்பு மட்டுமே தமிழ் சங்கத்தை தாங்கி பிடிப்பது போல் இருக்கிறது. தமிழ் ஸ்கூல் லை தமிழ் சங்கத்தில் இருந்து பிரித்து தனியாக நடத்த கூடாது ?
தமிழ் பள்ளியை தனியாக பிரித்து நடத்தினால் நிதி ஆதாரங்கள் நிறைய இருப்பதால் இதை மேலும் நன்றாக நடத்த முடியுமே ? அர்பணிப்பு நிறைந்த ஆர்வலர்கள் நிறைய இருப்பதால் தமிழ் பள்ளி மென் மேலும் வளர்வதற்கு இது நல்ல வாய்ப்பாக அமையும்.
ஒரு தலைவரிடம் பேசும் போது ஒரு நல்ல நிகழ்ச்சியை நடத்த ஆகும் செலவு தான் தமிழ் சங்கத்தின் மொத்த ஆண்டு வருமானமே என்றார். நாம் இதை பற்றி நிறைய பேசி இருக்கிறோம், விளம்பரதாரர்கள் நிறைய தேவை என்று, ஆனால் எப்போதாவது நிறைய விளம்பரதாரர்களை அணுகி இருக்கிறோமா ? அதே ஆட்கள் அதே முறையான நடைமுறைகள் ஒன்றும் மாற்றமில்லை என்றால் யார் வருவார்கள் ? மாற்றம் வேண்டும், இன்போசிஸ் மற்றும் வேறு கம்பெனி விழாக்கள் இங்கே நடக்கும் போது போய் பாருங்கள். எப்படி நன்றாக நடக்கிறது என்று. புதிய ஆட்கள் வர வேண்டும் புதிய எண்ணங்கள் வரவேண்டும். வழிவிடுங்கள்.